உயிர்ப்பூ..



உன்னைப்பற்றிய என் முதல் தமிழ் கவிதைக்கு
என்ன தலைப்புத்தர..? " உயிர்ப்பூ " எனவா.?
உன்னிடமே கேட்கிறேன்.!!
பாதியில் வந்து
விழியில் விழாது
இதயம் நுழைந்து என்னுயிரில்
கலந்த உணர்வு நீ..!!!
வாழ்க்கை மிகுதியின் இறுதிவரை
உன் உள்ளத்தில் உறவாட வருவேன் நான்.!!
இணையத்தில் இதயம் தேடியபோது என் மின்னஞ்சலில்
உதயமாகிய " உயிர்க்கவிதையே"
உன்னை உலகுக்கு அனுப்பிய கடவுளுக்கா? இல்லை உன்னை
என்னில் உதயமாக்கிய இணையத்திற்கா? யாருக்குச் சொல்ல?
என் நன்றிகளை?!! எனக்குள் குழப்பம்!
கண்மணிக்கு எட்டா தூரத்தில் பூத்திருக்கும் என்னுயிர்ப்பூவே
நெஞ்சில் பாசமலராய் உருமாறிய நீ.. என் உயிர் உள்ளவரை நீயே..

No comments: