ஆண்டு தோறும்...


வெள்ளைப்பனியிலொரு
மழலையின் கால்தடம் திரும்பி
பார்க்கும் முன்னே கரைந்து
கரைபுரண்டோடியது..
பால்போலே கிடந்த பனிமணல்கள்
கரையாதா என ஏங்கும் வெள்ளை உள்ளங்கள்
மத்தியில் வெள்ளை நிற பறவைகள் காணாமற்போயின.!!
கனடா குளிரில்..
பட்ட மரங்கள் பாய் மரங்களாகியது
சந்திரனோ தினந்தோறும் தலைதூக்கினான்

கொஞ்சநஞ்ச பனிமணல்களும் கரைந்தோடவும்
வெள்ளை பறவைகள் எங்களை நாற்புறமும்

சூழ்ந்த ஏரிகளை நோக்கி பறந்த வரும் அழகையும்
ஏரிகளில் ஓடங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் அலைகளோடு

அலையும் காட்சிகளை காண்பதிலும் என்னே ஓர் ஆனந்தம்
இப்படியாய் கனடிய வாழ்வில் ஆண்டுதோறும் வெள்ளை நிறம்
நீங்கா இடம் பெற்றுவிட்டது..

No comments: