இருமணம்...


இறையானை என்றதுவை முறையாக செய்து வந்து
அண்ணலாரின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி
இஸ்லாத்தின் விழுதுகளாய் எங்கள் நண்பன் (...........)ம்

பெண்குலத்தின் புதுப்பொலிவாய் (........)ம்
மெய்யினிலே ஆவியென மேதினியில்
கலந்திருந்து உங்கள் கரங்களிலே
கல்பு வைத்து கசடற்று வாழ்ந்திடுவீர்..!!

உலகின் போராட்டத்தை உன் உவகையிலே
கழித்திடவே..! உளமார ஏத்திட்டாய் (நண்பனே..ம்)

வாணலோகத்து பெண்களெல்லாம் தேனெடுத்து உன்னுகையில்
வடிந்து வடிந்த தேன் துளிகள் (.....) வடித்த சொல்லொன்றோ.!!
சொர்க்கத்து பூமரங்களில் உதிர்ந்த பூ.. (......) நீ ஆனாயோ..!!

அன்பு மணமக்களே..!!
உங்கள் உள்ளங்கள் நண்பர்களுக்கோ ரோஜாவாகட்டும்.!
வம்பர்களுக்கோ முள்ளாகட்டும்.! அன்பின் இல்லமாகட்டும்.!
இன்பத்தேன் கூடாகட்டும்.! இல்லறம் சொர்க்கமாகட்டும்.!

கிள்ளைமொழிப் பேசுகின்ற பிள்ளைகளை பெற்றெடுத்து
பதினாறு கலைகளையும் பரிசாக நீங்கள் பெற்று பல்லாண்டு காலம்
இப்பாரினிலே புகழெய்து வாழ்ந்திடவே என்றும் உளமார வாழ்ந்திடவே
என்றென்றும் உளமார வாழ்த்தி வல்ல இறைவனை நித்தம் வேண்டும்
மணமக்களின் நட்பு மறவாத நண்பன்..

No comments: