தோழா..


உனக்குத் தமிழ் பிடிக்கும் எனக்கு உன்னைப் பிடிக்கும்


தோழா.. நீ என்னை வாயாடி என்று சொன்னாய்
ஆனால் இப்பொழுதோ நான் பேச்சுக்களை விட
மெளனத்தையே அதிகம் விரும்புகிறேன்!
ஏனென்றால் நான் பேசும்பொழுது என் குரல் கேட்கிறது
என் மெளனத்திலோ உன் குரலல்லவா கேட்கிறது!!

என் பெற்றோர்கள் என்னை மென்மையானவள் என நினைக்கிறார்கள்.!!
ஆனால் நான் இப்பொழுதோ, முன்பை விட பலசாலி ஆகிவிட்டேன்.!!!
ஏனென்றால் இனிவரும் நாட்களில் உன் நினைவுகளின் சுமைகளையும் சுகமாக
சுமக்கவேண்டுமல்லவா.!!!!


என் நண்பர்கள் என்னை வெகுளிப்பெண் என அழைப்பார்கள்..
ஆனால் நான் இப்பொழுதோ மிகவும் விழிப்புடன் இருக்கிறேன்.!!!
ஏனென்றால் - உன் கொஞ்சும் கவி நடை தமிழையும், உன் தந்திரச்சொல்லாடல்களையும்
நயமாக உணர்ந்து் கொள்ளவேண்டுமல்லவா..!!!!

என் பேச்சை கேட்பவரெல்லாம், வித்தியாசமானதென்பர்..!!
ஆனால், இப்பொழுதோ..! உனக்கு, நீ படிக்குமளவுக்கு எழுத தேறிவிட்டேன், -
காரணம் - நீ , உனக்கு தமிழ் மிகவும் பிடித்ததாயிற்றே..!!!!!!

No comments: