என் புகைப்படம்


என் புகைப்படமும் என்னவளின் எதிர்ப்பார்ப்பும்


என்னிரு தோள்களுண்டு
நீயென் மேல் மென்மையாக
சாய்ந்துக் கொள்ள
என்னிரு செவிகளுண்டு
உன் பேச்சை மட்டுமே கேட்டு கொண்டேயிருக்க
என்னிரு கருவிழிகளுண்டு
உன்னை தினமும் பார்த்துக்கொண்டேயிருக்க
என்னிரு நாசியுண்டு
உன் வருகையின் வாசத்தை தூரத்திலிருந்தே தினம் உணர
என்னிரு கண்ணங்களுண்டு
உன் மென்கரங்களை கொண்டு என்னை அறைவதற்கு
என்னிரு உதடுகளுண்டு
உன் பெயரை மட்டுமே உச்சரிக்க..
என்னிரு கால்களுண்டு
உன்னை மட்டுமே தேடி அலைவதெற்கென்று
என் புகைப்படத்தில் கண்ணுக்குப் புலப்படாத
இரண்டுண்டு அது உன்னைப் பற்றி மட்டுமே
சிந்தித்து கொண்டிருக்ககூடிய சிறிய மூளையும்
உனக்காகவே ஒவ்வொரு நொடியும் துடித்துக்கொண்டிருக்கும்
என் மென்மையான இதயமும்
இன்னும் என்ன எதிர்ப்பார்க்கிறாய்? என் புகைப்படத்தில்?!
உன்னவனாக இருக்க வேண்டிய தகுதியையா.??!!!!

1 comment:

Natchathraa said...

அன்பு ராஜா...

உங்கள் கவிதையில் உங்களவளின் எதிர்ப்பார்ப்புகள் மட்டுமல்ல...
எல்லா பெண்களின் எதிர்ப்பார்ப்புகள்....

அருமையான புரிதல் பெண்மையின் ஏக்கங்களைப் பற்றி....

உங்களவள் மிகவும் அதிஷ்டசாலி
வாழ்த்துக்கள்....

அன்புடன்

நட்சத்திரா....