மன்னிப்பாயா?!


என்னவென்று சொல்ல.!!!
நான் உனைக்கானும் ஒவ்வொரு பொழுதும்
அடையும் மகிழ்ச்சிக்கு இல்லை கொள்ளளவு.!!!

ஆனால் - இன்றோ..!! இவ்விளவேனிர்
காலைப் பொழுதில் - என் தாமதம் - காரணம்,
நானில்லை - உனைக்காண நான் ஓடோடி கரை நோக்கி
வரும் கடலலைப் போல் வாஞ்சையோடு வந்துக்கொண்டிருந்தேன் -

வழியில் -- நாம் வாழும் நகரவாசிகளின் வாகன மெத்தனத்தால்,
வழியில் சிக்கினேன், சிதறுண்ட கண்ணாடியாய் நொறுங்கினேன் - உன்னை
காணமுடியவில்லையேயென்று..!!! - மன்றாடுகிறேன்..- மன்னிப்பாயா என்னை..!!!

No comments: