முத்தம்..


முத்த வித்தகியே..!!

முத்தமென்ற வாழ்க்கையின் உன்னதமான வித்தைக்குள் நீ
என்னை புதைத்து அந்த வித்தையின்
நித்தத்தை நிதமும் எனையுணர செய்தாயடி
உன் அந்த முதல் முத்தம் நான் ரசித்து
புகைத்த ஆயிரம் சிகரெட்டுக்களை விட

அருமையான உணர்வுக்ளை என்னுள் தந்து
காலங்காலமாக கலையென கருதி நண்பர்க்ளோடு

ஊரைத்தாண்டி ஐந்து கிலோமீட்டர் சென்று "திருட்டு தம்"
அடித்த நேரங்கள் மற்ற பழக்கங்களனைத்தையும்

உன் ஒற்றை முத்தவித்தைக்குள் மறைக்க செய்த மாயமென்னடி..?!
என் முத்த வித்தகியே..!!

1 comment:

அகரம் அமுதா said...

ஏதேது! பசியெடுத்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். உங்களுக்கு முத்தம் வைத்தால் மொத்தமும் மறந்துபோகிறதோ? பாராட்டுக்கள். ரசிக்கத்தக்கக் கவிதை!