நட்போடு நாம் வாழுவோம்..

விண்ணோடும் மண்ணோடும்
நாம் வாழும் வாழ்வில்
இன்றோடு.. நட்பாக பத்தாண்டுக் காலம்.........
மகிழ்வோடு கொண்டாடுவோம்... என்றென்றும்

நட்போடு நாம் வாழுவோம்
(விண்ணோடும்..)

வழிகின்ற கண்ணீரில் நிறமில்லையே
நம் நட்புக்கும் என்றென்றும் பிரிவில்லையே..

(வழிகின்ற..)

காற்றுக்கு திசையில்லை தேசமில்லை
நட்பென்றும் உறவாகட்டும்..

(விண்ணோடும்)

நம் நட்பெல்லாம் உறவாகி ஊராகட்டும்
நம் தேசத்தில்.. நட்பென்னும் பூ பூக்கட்டும்..

No comments: