விண்ணோடும் மண்ணோடும்
நாம் வாழும் வாழ்வில்
இன்றோடு.. நட்பாக பத்தாண்டுக் காலம்.........
மகிழ்வோடு கொண்டாடுவோம்... என்றென்றும்
நட்போடு நாம் வாழுவோம்
(விண்ணோடும்..)
வழிகின்ற கண்ணீரில் நிறமில்லையே
நம் நட்புக்கும் என்றென்றும் பிரிவில்லையே..
(வழிகின்ற..)
காற்றுக்கு திசையில்லை தேசமில்லை
நட்பென்றும் உறவாகட்டும்..
(விண்ணோடும்)
நம் நட்பெல்லாம் உறவாகி ஊராகட்டும்
நம் தேசத்தில்.. நட்பென்னும் பூ பூக்கட்டும்..
என் அன்புமூத்த மகளே..
என் அன்புமூத்த மகளே..
எங்களின் முதல் தங்கமே
இன்று உன் பிறந்தநாள், இந்த நாளை
மட்டும்தான் நான் நம் வீட்டுக்காலண்டரில்
குறித்து வைக்காத திருநாள்॥ காரணம்
இன்று உன் பிறந்தநாள், இந்த நாளை
மட்டும்தான் நான் நம் வீட்டுக்காலண்டரில்
குறித்து வைக்காத திருநாள்॥ காரணம்
என் வாழ்வின் முதன் முறையாய் என்னுயிரை, உயிரின்
முதற்துடிப்பை தொட்டிலில் கண்முன்னே கண்ட நாள்..
முதற்துடிப்பை தொட்டிலில் கண்முன்னே கண்ட நாள்..
நீ பிறந்த நாளன்று முதல்
வேலையாய் என்னில் அனைத்தும்
ஆராவரிக்கத்தொடங்கிய நாள்..!!
ஆராவரிக்கத்தொடங்கிய நாள்..!!
அந்த ஒரு நாளுக்காக பத்துமாதங்கூட
காத்திருக்க முடியாமல் தினந்தோறும் உன்
வருகைக்கான நாளை எண்ணிக் காத்திருந்து மகிழ்ந்தோம்..!!
நீ பிறந்தநாளன்று நீ பிறந்த மருத்துவமனையில்
நீ பிறந்த மருத்துவ அறைக்கு ராசி வந்துவிட்டதாக
ம்ருத்துவர் கூற மனமகிழ்ந்தோம்..
அழகாய் சிரிப்புடன் பிறந்த குழந்தைகளில் நீயும்
ஒரு குழந்தையென மருத்துவர்
ஒரு குழந்தையென மருத்துவர்
கூற புலங்காகிதமடைந்தோம்..!!
நீ பிறக்கும்போது 3 கிலோ இருந்தாய்
நீ பிறக்கும்போது 3 கிலோ இருந்தாய்
பத்துமாதம் உன் அம்மாவால்
3 கிலோ அழகுதான்
சேர்க்க முடிந்ததோ என
சேர்க்க முடிந்ததோ என
எண்ணி என்னுள் ஆச்சர்யம்..!!!
மழைக்காலம், கார்காலம், குளிர்க்காலம்
என எந்த காலமானாலும் சரி
நீ பிறந்த காலம்தான் எங்களுக்கு
நீ பிறந்த காலம்தான் எங்களுக்கு
அழகான நல்லகாலம்..!!
உன் பிறந்த நாள் எப்போ? எப்போ? என
நீ மூன்று மாதமாய் கேட்டுக்கொண்டிருந்தாயே
எங்களின் கண்மனியே.. இதோ இன்றுதான்
உன் ஐந்தாவது பிறந்தநாள்... ஆனால் எங்களுக்கோ
என்றுமே நீ பிறந்தநாள்தான்..!!
என நான் சொல்லி உனக்குப்புரிய
என நான் சொல்லி உனக்குப்புரிய
இன்னும் சில பிறந்தநாட்களாகும்..
ஒருமுறைதான் நீ பிறந்தாய் ஆனால்
உன்னைப்பார்க்கும் ஒவ்வொரு
நொடிப்பொழுதும் நான்
பிறந்துக்கொண்டிருக்கிறேன்..
உன் பிறப்பு உன்
தாய்க்கு தாய்மையையும்
எனக்கு வாழ்வையும் தந்தது..
எனக்கு வாழ்வையும் தந்தது..
நீ பிறந்தாய் எனக்கு இரண்டாவதாய்
ஒரு முழுநிலவு தென்பட்டது..
வருடத்திற்கு 12 விடுமுறை நாட்கள்
வந்தாலும் உன் பிறந்தநாள்தான்
எனக்கான அரசு விடுமுறைநாள்..
என் மனைவிக்கு நீ பிறந்தாய்
என் தாய்க்க்குப்பின் நீயே என் தாய்..
என் அன்புமூத்த மகளே..
ஆசிரியர்..
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்
கணக்கிலடங்கா மணித்துளிகளை செலவிட்டு
சிலைகளல்லா இளம் எதிர்கால சிற்பிகளை செதுக்கி
அழகுப்பார்க்கும் ஆசிரியர்
ஆட்டங்கள்தான் அருமையென எண்ணி
அழகான சிந்தனைகளை வெளிக்கொணர தெரியா
மாணவனை அழகிய வடிவில் வண்ணமயமாக்கும் ஆசிரியர்
அன்பும் கட்டுப்பாடும் ஒரு சேர நிலைத்து
இளைய சமுதாயத்தை சுடர்விட்டு எரியும்
ஒளிவிளக்காய் ஓளிக்கச் செய்யும் ஆசிரியர்
மாணவன் எங்ஙணம் முயன்றும்
முடியாமல் போகும் நிலையில் அன்பான
அரவணைப்பிலும் அழகிய செயல்களாலும்
செதுக்கிக் காட்டும் ஆசிரியர்
கடினமான மலைகளும் மென்மையான நதிகளும்
ஒருமிக்க சங்கமித்து சோலைதனை உருவாக்கும் அழகைவிட
ஆசிரியர் சில சமயம் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் மென்மையான
அழகுரைகளையும் தேவையென்ற அறிவுரைகளையும் தந்து நாட்டின்
எதிர்காலத் தூணை உருவாக்கும் அற்புதத்தை - உள்ளூர முழுமையாய்
அனுபவித்தால் மட்டுமே புரிய வைக்கும் ஆசிரியர்
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வேதத்தில்
மூன்றாமிடம் பிடித்திருந்தாலும் அதிக நேரம் மாணவனிடம்
நேரத்தை செலவு செய்து முதலாமிடம் பிடித்து மாணவனின்
வாழ்வை செம்மைப் படுத்தி செதுக்கும் சிற்பியாய் ஆசிரியர்..
கணக்கிலடங்கா மணித்துளிகளை செலவிட்டு
சிலைகளல்லா இளம் எதிர்கால சிற்பிகளை செதுக்கி
அழகுப்பார்க்கும் ஆசிரியர்
ஆட்டங்கள்தான் அருமையென எண்ணி
அழகான சிந்தனைகளை வெளிக்கொணர தெரியா
மாணவனை அழகிய வடிவில் வண்ணமயமாக்கும் ஆசிரியர்
அன்பும் கட்டுப்பாடும் ஒரு சேர நிலைத்து
இளைய சமுதாயத்தை சுடர்விட்டு எரியும்
ஒளிவிளக்காய் ஓளிக்கச் செய்யும் ஆசிரியர்
மாணவன் எங்ஙணம் முயன்றும்
முடியாமல் போகும் நிலையில் அன்பான
அரவணைப்பிலும் அழகிய செயல்களாலும்
செதுக்கிக் காட்டும் ஆசிரியர்
கடினமான மலைகளும் மென்மையான நதிகளும்
ஒருமிக்க சங்கமித்து சோலைதனை உருவாக்கும் அழகைவிட
ஆசிரியர் சில சமயம் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் மென்மையான
அழகுரைகளையும் தேவையென்ற அறிவுரைகளையும் தந்து நாட்டின்
எதிர்காலத் தூணை உருவாக்கும் அற்புதத்தை - உள்ளூர முழுமையாய்
அனுபவித்தால் மட்டுமே புரிய வைக்கும் ஆசிரியர்
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வேதத்தில்
மூன்றாமிடம் பிடித்திருந்தாலும் அதிக நேரம் மாணவனிடம்
நேரத்தை செலவு செய்து முதலாமிடம் பிடித்து மாணவனின்
வாழ்வை செம்மைப் படுத்தி செதுக்கும் சிற்பியாய் ஆசிரியர்..
மனித(ம்)ன்
மண்ணில் மனிதன் படைக்கப்பட்டான் இறைவனால்..
வாழ்வதற்காகவே..!! ஆனால்
மனிதனோ படைத்த இறைவனை
மறந்து..!!! மனிதத்தையும் மனிதனையும் நோகடித்தும்
சாகடித்தும் கொண்டிருக்கிறான்.!!?
இதுதான் மனிதமா.?
இவன் தான் மனிதனா.!?
வாழ்வதற்காகவே..!! ஆனால்
மனிதனோ படைத்த இறைவனை
மறந்து..!!! மனிதத்தையும் மனிதனையும் நோகடித்தும்
சாகடித்தும் கொண்டிருக்கிறான்.!!?
இதுதான் மனிதமா.?
இவன் தான் மனிதனா.!?
மனையாழி (அ) மனைவி....
அன்பின் கூடாக அழகிய இல்லாள்
அவள் அன்புக்கும் வானமே எல்லை
எல்லைகளை எனக்குள் உருவாக்கி அதனை
அவ்வப்போது அழகாய் உணர்த்தும்
அன்பான இல்லத்தரசி..
போற்றுவோர் போற்ற தூற்றுவோர் தூற்ற
கல்லானாலும் கணவன் புல்லானும் புருஷன்
என்ற கட்டுப்பாட்டுக்குள் விதைக்கப்பட்ட
கண்ணியமான மனைவி
தன் கணவனை முழுமையானவனாய்
இவ்வுலகுக்கு இதமாய் இல்லறத்தின் பயனாய்
ஈன்றெடுத்து அவன் முகத்தில் மலரும் மகிழ்வை
தன்னால் தரமுடிந்ததை எண்ணி உள்ளூர இன்புறும் இல்லாள்
ஆண்டாண்டு காலமாய் எவருக்கும் செவிமடுக்கா
ஆடவனை ஒற்றை மந்திரச்சொல்லால்
ஒழுக்கமானவாய் மாற்றும் அன்பு படைத்த
அழகான மனையாழி..
" இடிப்பாரை இல்லா எமறா மன்னன்
கெடுப்பாரிலானும் கெடும்". என்ற குறளுக்கு
ஏற்ப நடக்கும் சில ஆடவனை வேண்டும்பொழுது
இடித்தும் சிலவேளைகளில் அரவணைத்தும் அழகாய்
இன்புற்று வாழ வழிவகுக்கும் வல்லமைப்படைத்த அரசி..
தனியாயிருந்து உனக்கு துணையாய் வந்து
இனி காலங்காலமாய் நீ எனக்கு நானுக்கு
என அமைதி கலந்து உரக்க சொல்லும்
உற்ற மனைவி..
நான் தான் வேண்டுமெனக்கு என்பதை விட்டு
நீயும் நீ சார்ந்ததுமே இனியெனக்கு என
எல்லாவற்றையும் தந்து நல்ல தாயாக
கடைசிவரை நல்ல மனையாழி..
அவள் அன்புக்கும் வானமே எல்லை
எல்லைகளை எனக்குள் உருவாக்கி அதனை
அவ்வப்போது அழகாய் உணர்த்தும்
அன்பான இல்லத்தரசி..
போற்றுவோர் போற்ற தூற்றுவோர் தூற்ற
கல்லானாலும் கணவன் புல்லானும் புருஷன்
என்ற கட்டுப்பாட்டுக்குள் விதைக்கப்பட்ட
கண்ணியமான மனைவி
தன் கணவனை முழுமையானவனாய்
இவ்வுலகுக்கு இதமாய் இல்லறத்தின் பயனாய்
ஈன்றெடுத்து அவன் முகத்தில் மலரும் மகிழ்வை
தன்னால் தரமுடிந்ததை எண்ணி உள்ளூர இன்புறும் இல்லாள்
ஆண்டாண்டு காலமாய் எவருக்கும் செவிமடுக்கா
ஆடவனை ஒற்றை மந்திரச்சொல்லால்
ஒழுக்கமானவாய் மாற்றும் அன்பு படைத்த
அழகான மனையாழி..
" இடிப்பாரை இல்லா எமறா மன்னன்
கெடுப்பாரிலானும் கெடும்". என்ற குறளுக்கு
ஏற்ப நடக்கும் சில ஆடவனை வேண்டும்பொழுது
இடித்தும் சிலவேளைகளில் அரவணைத்தும் அழகாய்
இன்புற்று வாழ வழிவகுக்கும் வல்லமைப்படைத்த அரசி..
தனியாயிருந்து உனக்கு துணையாய் வந்து
இனி காலங்காலமாய் நீ எனக்கு நானுக்கு
என அமைதி கலந்து உரக்க சொல்லும்
உற்ற மனைவி..
நான் தான் வேண்டுமெனக்கு என்பதை விட்டு
நீயும் நீ சார்ந்ததுமே இனியெனக்கு என
எல்லாவற்றையும் தந்து நல்ல தாயாக
கடைசிவரை நல்ல மனையாழி..
அழகான கோடைக்காலம்..
கோடையில் குதூகலாமாய் அழகிய சந்திரோதயத்தோடு
துவங்கும் புத்தம்புது காலைப்பொழுதில் அன்புடன் மகிழ்வாய்
துள்ளித்தெரியும் குழந்தைகள் அவர்களுக்கென்றே நிதமும்
குளிர்ச்சியாய் மெல்லிசையோடு வலம் வரும் " ஐஸ் வண்டி"
நீச்சல் குள மேற்கரையில் அமைதியாய்
உறங்கும் கோடை விரும்பிகள்
சூரியன் சுட்டெரித்தாலும் சட்டை செய்யாமல் அன்றாடம்
அனைவரையும் ஒருங்கினைத்து அவல்மெல்லும் நம் தமிழினம்
அரை கிலோமீட்டராவது நடந்தே ஆகவேண்டும்
என தள்ளாடி நடக்கும் வயோதிகர்கள்..
பள்ளிக்கூடம் வாராந்திர விடுமுறையின் போதே திருவிழா நாளாக
இன்புறும் மாணவசெல்வங்களுக்கு முழுமையாய்
இரு மாதங்கள் விடுமுறை சொர்க்கமாய் காட்சியளிக்கிறது
அச்சொர்க்கத்தின் தொடர் திருவிழாவுக்கு அவன் போடும் திட்டங்கள் பல
" பள்ளியும் இல்லை - காலையில் சீக்கிரம் எழு " என்ற சத்தமும் இல்லை
இரவில் படி படி என்ற அதட்டலும் இல்லை" நிம்மதியாய் உறங்கலாம்
வேண்டிய நேரத்திற்கு வேண்டியதை செய்யலாம் " என திட்டங்கள் பல் தீட்டும் மாணவன்..!!
அவரவர்களுக்கு பிடித்த விளையாட்டுக்களை வாரந்தோறும்
விளையாடும் வாலிபர்கள்..
அடர்த்தியாய் அதனினும் அதிகமாய் பூத்துக்குலுங்கும்
செர்ரி பழங்கள் அதனை சுவைப்பதற்காகவே ஆயிரமாயிரம்
குடும்பங்கள் செர்ரி பழங்கள் நிறைந்த கிராமங்களை நோக்கி செல்லும் உல்லாச பயணங்கள்.!
" கேம்பிங்க் என்றும்.! காட்டேஜ் லைஃப் என்றும்.!
நகரவாசிகள் தன்னை கிராமங்களிலும் காடுகளிலும் அமைதியாய்
ஐக்கியப்படுத்தி "B.B.Q" என்ற முறையில் உணவுகளையே ஒரு வாரக்காலம்
குக்கிராமங்களுக்கு சென்று "குக்" பண்ணிக்கொண்டு வாழ்ந்தின்புற வருடம் முழுதும்
வகைவகையான திட்டங்கள் தீட்டும் நகரவாசிகள்".!
கோடையே நம் வாழ்க்கையின் முழுமையாகாதா என எண்ணும் பல
எண்ணங்களின் ஓசையை முழுமையாய் இரண்டு மாதங்களே அனுபவிக்கும்
ஒன்றாய் சேர்ந்து வரவேற்கும் " அழகான கோடைக்காலம்"
துவங்கும் புத்தம்புது காலைப்பொழுதில் அன்புடன் மகிழ்வாய்
துள்ளித்தெரியும் குழந்தைகள் அவர்களுக்கென்றே நிதமும்
குளிர்ச்சியாய் மெல்லிசையோடு வலம் வரும் " ஐஸ் வண்டி"
நீச்சல் குள மேற்கரையில் அமைதியாய்
உறங்கும் கோடை விரும்பிகள்
சூரியன் சுட்டெரித்தாலும் சட்டை செய்யாமல் அன்றாடம்
அனைவரையும் ஒருங்கினைத்து அவல்மெல்லும் நம் தமிழினம்
அரை கிலோமீட்டராவது நடந்தே ஆகவேண்டும்
என தள்ளாடி நடக்கும் வயோதிகர்கள்..
பள்ளிக்கூடம் வாராந்திர விடுமுறையின் போதே திருவிழா நாளாக
இன்புறும் மாணவசெல்வங்களுக்கு முழுமையாய்
இரு மாதங்கள் விடுமுறை சொர்க்கமாய் காட்சியளிக்கிறது
அச்சொர்க்கத்தின் தொடர் திருவிழாவுக்கு அவன் போடும் திட்டங்கள் பல
" பள்ளியும் இல்லை - காலையில் சீக்கிரம் எழு " என்ற சத்தமும் இல்லை
இரவில் படி படி என்ற அதட்டலும் இல்லை" நிம்மதியாய் உறங்கலாம்
வேண்டிய நேரத்திற்கு வேண்டியதை செய்யலாம் " என திட்டங்கள் பல் தீட்டும் மாணவன்..!!
அவரவர்களுக்கு பிடித்த விளையாட்டுக்களை வாரந்தோறும்
விளையாடும் வாலிபர்கள்..
அடர்த்தியாய் அதனினும் அதிகமாய் பூத்துக்குலுங்கும்
செர்ரி பழங்கள் அதனை சுவைப்பதற்காகவே ஆயிரமாயிரம்
குடும்பங்கள் செர்ரி பழங்கள் நிறைந்த கிராமங்களை நோக்கி செல்லும் உல்லாச பயணங்கள்.!
" கேம்பிங்க் என்றும்.! காட்டேஜ் லைஃப் என்றும்.!
நகரவாசிகள் தன்னை கிராமங்களிலும் காடுகளிலும் அமைதியாய்
ஐக்கியப்படுத்தி "B.B.Q" என்ற முறையில் உணவுகளையே ஒரு வாரக்காலம்
குக்கிராமங்களுக்கு சென்று "குக்" பண்ணிக்கொண்டு வாழ்ந்தின்புற வருடம் முழுதும்
வகைவகையான திட்டங்கள் தீட்டும் நகரவாசிகள்".!
கோடையே நம் வாழ்க்கையின் முழுமையாகாதா என எண்ணும் பல
எண்ணங்களின் ஓசையை முழுமையாய் இரண்டு மாதங்களே அனுபவிக்கும்
ஒன்றாய் சேர்ந்து வரவேற்கும் " அழகான கோடைக்காலம்"
அன்பெனும் முழுமதி
Treat me Right
because I am worth the fight
light up my eyes and give my stomuck butterflies
smile at me and you will see me
we will be happy as we can be
give me your heart and
I promise to never want to be a part
treat me with respect and
our LOVE will be PERFECT
என் ஆங்கில எழுத்தை அருமையாய் மொழிப்பெயர்த்த குருமூர்த்தி சார்
அவர்களுக்கு என் நன்றிகள்..
அன்பெனும் முழுமதி.
******************************
உன் தோளுக்கு நான் சரியானவன்
என்றும் உனக்கு நான் நிகரானவன்
என் கண்ணில் ஒளியைக் காண
என்றும் நெஞ்சில் நிறைவைத் தேட
உன் பூஞ்சிரிப்பு ஒன்று போதும்
தோளில் பூமாலை நின்று வீழும்
உன் அன்பினைத் தருவாய் உறுதியாய்
என்றும் அன்பினைப் பெறுவாய் இறுதியாய்
because I am worth the fight
light up my eyes and give my stomuck butterflies
smile at me and you will see me
we will be happy as we can be
give me your heart and
I promise to never want to be a part
treat me with respect and
our LOVE will be PERFECT
என் ஆங்கில எழுத்தை அருமையாய் மொழிப்பெயர்த்த குருமூர்த்தி சார்
அவர்களுக்கு என் நன்றிகள்..
அன்பெனும் முழுமதி.
******************************
உன் தோளுக்கு நான் சரியானவன்
என்றும் உனக்கு நான் நிகரானவன்
என் கண்ணில் ஒளியைக் காண
என்றும் நெஞ்சில் நிறைவைத் தேட
உன் பூஞ்சிரிப்பு ஒன்று போதும்
தோளில் பூமாலை நின்று வீழும்
உன் அன்பினைத் தருவாய் உறுதியாய்
என்றும் அன்பினைப் பெறுவாய் இறுதியாய்
முத்தம்..

முத்த வித்தகியே..!!
முத்தமென்ற வாழ்க்கையின் உன்னதமான வித்தைக்குள் நீ
என்னை புதைத்து அந்த வித்தையின்
நித்தத்தை நிதமும் எனையுணர செய்தாயடி
உன் அந்த முதல் முத்தம் நான் ரசித்து
புகைத்த ஆயிரம் சிகரெட்டுக்களை விட
அருமையான உணர்வுக்ளை என்னுள் தந்து
காலங்காலமாக கலையென கருதி நண்பர்க்ளோடு
ஊரைத்தாண்டி ஐந்து கிலோமீட்டர் சென்று "திருட்டு தம்"
அடித்த நேரங்கள் மற்ற பழக்கங்களனைத்தையும்
உன் ஒற்றை முத்தவித்தைக்குள் மறைக்க செய்த மாயமென்னடி..?!
என் முத்த வித்தகியே..!!
அம்மா...
அம்மா என்றழைக்காத உயிர்களில்லை
இவ்வுலகில், எனக்கான அனைத்தையும் அலுக்காமல்
செய்வாயே அம்மா
இவ்வுலகில் தன்னைவிட என்னில் உயிராக இருந்தாயே
அம்மா, - சில பொழுதுகளில் காயம்படும்பொழுதெல்லாம்
மெளனத்தையே உனக்குச்சொந்தமாக்கி கொள்கிறாயே
எப்படியம்மா கடலைவிட பெரிய பொறுமையை உன்னுள்
வளர்த்துக்கொண்டாய்..
நான் கீழ்விழுந்தபொழுதெல்லாம் தோழமையுடன்
தோள் கொடுத்து நிற்பாயே அம்மா
அழைக்கும் குரலுக்கெல்லாம் சளைக்காமல்
செவிசாய்க்கும் அம்மா
இவ்வுலகில் எப்பெரிய எழுத்தாளனும் என்றுமே எழுத்தில்
விளக்கமுடியாததை விட அதிகமம்மா உன் அன்பு
மரியாதை என்ற மாபெரும் பண்பை உன்னிலிருந்து முழுமையாய்
எனக்கு கற்றுக்கொடுத்த அம்மா
அம்மா நீயே என் ஆரம்பகால ஆசிரியையாய்
அறிவுரை களஞ்சியமாய் இன்னும் எண்ணிலடங்கா
வர்ணிக்கமுடியாத பல பாத்திரங்கள் படைத்த அம்மா..
உன்னிட்த்தில் ஒன்றைக் கேட்கவேண்டும் நான்.!!
அம்மா இவையனைத்தும் எப்படியம்மா உன்னால் மட்டுமே
முடிகிறது.??? எந்த சக்தியை நீ மட்டும் இவ்வுலகில் பெற்றிருக்கிறாய் அம்மா.??!!
இந்த கேள்விக்கும் உனக்கேயுரிய மெளனத்தாலாட்டையே பதிலாய் தந்த அம்மா
இவ்வுலகில் எவ்வுயிரினும் காணா ஒன்றைமட்டும் கண்டேன் உன்னிடம் அது.!!
" அம்மா என்றால் உயிரில் கலந்த அன்பு..."
இவ்வுலகில், எனக்கான அனைத்தையும் அலுக்காமல்
செய்வாயே அம்மா
இவ்வுலகில் தன்னைவிட என்னில் உயிராக இருந்தாயே
அம்மா, - சில பொழுதுகளில் காயம்படும்பொழுதெல்லாம்
மெளனத்தையே உனக்குச்சொந்தமாக்கி கொள்கிறாயே
எப்படியம்மா கடலைவிட பெரிய பொறுமையை உன்னுள்
வளர்த்துக்கொண்டாய்..
நான் கீழ்விழுந்தபொழுதெல்லாம் தோழமையுடன்
தோள் கொடுத்து நிற்பாயே அம்மா
அழைக்கும் குரலுக்கெல்லாம் சளைக்காமல்
செவிசாய்க்கும் அம்மா
இவ்வுலகில் எப்பெரிய எழுத்தாளனும் என்றுமே எழுத்தில்
விளக்கமுடியாததை விட அதிகமம்மா உன் அன்பு
மரியாதை என்ற மாபெரும் பண்பை உன்னிலிருந்து முழுமையாய்
எனக்கு கற்றுக்கொடுத்த அம்மா
அம்மா நீயே என் ஆரம்பகால ஆசிரியையாய்
அறிவுரை களஞ்சியமாய் இன்னும் எண்ணிலடங்கா
வர்ணிக்கமுடியாத பல பாத்திரங்கள் படைத்த அம்மா..
உன்னிட்த்தில் ஒன்றைக் கேட்கவேண்டும் நான்.!!
அம்மா இவையனைத்தும் எப்படியம்மா உன்னால் மட்டுமே
முடிகிறது.??? எந்த சக்தியை நீ மட்டும் இவ்வுலகில் பெற்றிருக்கிறாய் அம்மா.??!!
இந்த கேள்விக்கும் உனக்கேயுரிய மெளனத்தாலாட்டையே பதிலாய் தந்த அம்மா
இவ்வுலகில் எவ்வுயிரினும் காணா ஒன்றைமட்டும் கண்டேன் உன்னிடம் அது.!!
" அம்மா என்றால் உயிரில் கலந்த அன்பு..."
அப்பா..

அயராதுழைத்து அல்லும் பகலும் அரும்பாடு பட்டு
அழகிய செல்வங்களின் ஆணிவேராய் அருமையாய்
காட்சியளிக்கும் அப்பா..!
வாழ்க்கையின் பாடங்களை வாய்வார்த்தையுடன் நிறுத்திக் கொள்ளாமல்
நடைமுறையில் நயமாய் கற்றுக்கொடுக்கும் அப்பா.!
கற்றுக்கொடுத்த அனைத்தையும் முறையாய் கடைப்பிடிக்க
தூண்டும் கல்வியாசிரியர் அப்பா.!
கல்வியாசிரியர் என்றாலே கண்டிப்பு இருக்குமல்லவா!
அக்கண்டிப்பை பல சமயங்களில் அதட்டலாலும் சில சமயம்
அருமையாகவும் வெளிப்படுத்தும் அப்பா.!
வெளிப்படுத்தும் அன்பைக்கூட நேரடியாக வெளிப்படுத்தாமல்
மற்றவரின் துணையுடன் மறைமுகமாய் காட்டும் அப்பா.!
மறைமுகமாய் ஒவ்வொருப்பிள்ளைகளின்
கதாநாயகனாய் தோன்றும் அப்பா.!
அக்கதாநாயகனாய் தோன்றும் அப்பா அவ்வப்போது
கடோத்கஜனாய் காட்சியளிப்பதுமுண்டு பிள்ளைகளின் பார்வையில்..!!
பிள்ளைகளின் பாசத்தை சில நேரங்களில்
நேரடியாய் உணர்ந்திராத அப்பா.!
நேரங்கிடைத்த பொழுதெல்லாம் பிள்ளையின்
பெருமையை மற்றவர்களிடம் பறைசாற்றும் அப்பா.!
அப்பாவின் அரும்பெருமைகளை தன்னுள்ளே
அடக்கியிருக்கும் பிள்ளையை கண்டுப்பிடிக்கமுடியாத அப்பா.!
பிள்ளையை கண்டுப்பிடிக்க முடியாத அப்பாவை தினமும்
தன் வாழ்வில் கதாநாயகனாய் காணும் பிள்ளை
" அப்பாவே தன் வாழ்வில் முதல் கதாநாயகனாய்.."!!
இருமணம்...

இறையானை என்றதுவை முறையாக செய்து வந்து
அண்ணலாரின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி
இஸ்லாத்தின் விழுதுகளாய் எங்கள் நண்பன் (...........)ம்
பெண்குலத்தின் புதுப்பொலிவாய் (........)ம்
மெய்யினிலே ஆவியென மேதினியில்
கலந்திருந்து உங்கள் கரங்களிலே
கல்பு வைத்து கசடற்று வாழ்ந்திடுவீர்..!!
உலகின் போராட்டத்தை உன் உவகையிலே
கழித்திடவே..! உளமார ஏத்திட்டாய் (நண்பனே..ம்)
வாணலோகத்து பெண்களெல்லாம் தேனெடுத்து உன்னுகையில்
வடிந்து வடிந்த தேன் துளிகள் (.....) வடித்த சொல்லொன்றோ.!!
சொர்க்கத்து பூமரங்களில் உதிர்ந்த பூ.. (......) நீ ஆனாயோ..!!
அன்பு மணமக்களே..!!
உங்கள் உள்ளங்கள் நண்பர்களுக்கோ ரோஜாவாகட்டும்.!
வம்பர்களுக்கோ முள்ளாகட்டும்.! அன்பின் இல்லமாகட்டும்.!
இன்பத்தேன் கூடாகட்டும்.! இல்லறம் சொர்க்கமாகட்டும்.!
கிள்ளைமொழிப் பேசுகின்ற பிள்ளைகளை பெற்றெடுத்து
பதினாறு கலைகளையும் பரிசாக நீங்கள் பெற்று பல்லாண்டு காலம்
இப்பாரினிலே புகழெய்து வாழ்ந்திடவே என்றும் உளமார வாழ்ந்திடவே
என்றென்றும் உளமார வாழ்த்தி வல்ல இறைவனை நித்தம் வேண்டும்
மணமக்களின் நட்பு மறவாத நண்பன்..
வேண்டுதல்... (காதலினால்..)
ஆண்டு தோறும்...

வெள்ளைப்பனியிலொரு
மழலையின் கால்தடம் திரும்பி
பார்க்கும் முன்னே கரைந்து
கரைபுரண்டோடியது..
பால்போலே கிடந்த பனிமணல்கள்
கரையாதா என ஏங்கும் வெள்ளை உள்ளங்கள்
மத்தியில் வெள்ளை நிற பறவைகள் காணாமற்போயின.!!
கனடா குளிரில்..
பட்ட மரங்கள் பாய் மரங்களாகியது
சந்திரனோ தினந்தோறும் தலைதூக்கினான்
கொஞ்சநஞ்ச பனிமணல்களும் கரைந்தோடவும்
வெள்ளை பறவைகள் எங்களை நாற்புறமும்
சூழ்ந்த ஏரிகளை நோக்கி பறந்த வரும் அழகையும்
ஏரிகளில் ஓடங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் அலைகளோடு
அலையும் காட்சிகளை காண்பதிலும் என்னே ஓர் ஆனந்தம்
இப்படியாய் கனடிய வாழ்வில் ஆண்டுதோறும் வெள்ளை நிறம்
நீங்கா இடம் பெற்றுவிட்டது..
தமிழ் புத்தாண்டு....

கடந்துபோன மாதங்களையும் நாட்களையும் நாம் எண்ணி
அடையபெற்ற இன்பத் துன்பங்களை நினைத்து
பார்க்க கூட நேரமில்லா இவ்வுலக இயந்திர
வாழ்க்கையில் இனிதே நிறைவுற்ற பன்னிரண்டு
தமிழ் மாதங்கள் கழித்து தமிழர் தம் ஒவ்வொருவரின்
மனதிலும் சந்தோஷம் பெருகவும் சிரித்துக்கொண்டே வாழவும்
சித்திரை திருநாளாம் இன்று தமிழர் தம் பெருநாள் முதல்
வளமான அமைதியான வாழ்வு இவ்வுலகில் அமைய
எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டியவனாய்
அன்புடனுக்கும் அன்புடன் குடும்பத்தின் உறவினர், நண்பர்கள்
அனைவருக்கும் மீண்டும் என் புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
இதயம் (காதலினால்..)
குடும்பதினத்தில்
குழந்தை..

இறுதியாக முதன்முதலாய் பிறந்த குழந்தை
பார்த்தபோது பரவசமடைந்த பெற்றோர்
பிறந்தவுடன் இரத்தசகதியுடன்
வாழ்க்கையின் முதலாய் குழந்தையை
கண்டு மயங்கிய தந்தை
வாழ்க்கையின் முழுமையை முழுதாய்
அடைந்த ஆனந்தகண்ணீர் விட்ட தாய்..
வாழ்க்கை மேலும் விரிவடைந்ததை கண்ட பெற்றோர்...
சின்னஞ்சிறு குழந்தையவளின் சிறு பிஞ்சிவிரல்களும்
அழகிய தேன்சிந்தும் தேகமும் இவ்வுலகில் எவ்விலை
கொடுத்தாலும் கிடைக்காதெனவுணர்ந்த பெற்றோர்..
தங்களின் சகலவிதமான நடவடிக்கைகளையும்
நொடிப்பொழுதில் திருப்பிப்போட்ட குழந்தை
தன் அழுகையின் மொழியால் தன் தேவையை
பூர்த்தி செய்ய தன் பெற்றோருக்கு தெரிய தந்த குழந்தை..
மொத்தத்தில் நாள் பொழுதில் சின்னஞ்சிறு
குழந்தையவள் அனைவரையும் தன்னாளுமையின்
கீழ் வைத்த ஆளுநரானாள்...
பெற்றோரோ பல இரவுகளை நித்திரையின்றி
கண் விழித்து கழித்தபோதிலும்சிறுக்குழந்தையவளின் சில்லென்ற
சிரிப்பதனை கண்டவுடன் அயராயிரவுகளனைத்தும்
ஆனந்த இரவாயுணர்ந்த பெற்றோர்
குழந்தையவளின் அசைவனைத்தையும்
அங்கங்குலமாக ரசித்த பெற்றோர்
ஐந்திங்கள் கழிந்த குழந்தையின்
விரலினிக்கிடையில் கமழும் எச்சிலின்
மணத்தை எத்தனை வாசனைத்திரவியங்களிலும்
இதுவரையுணர்ந்திராத பெற்றோர்
சிறு குழந்தையவளின் சங்கேத பாஷையான
".. Gகா.. Gகா.. Gகூ... Gகூ.." வுக்கு நிகரான
எந்த மெல்லிசைகளையும்
இதுவரை கேட்டிராத பெற்றோர்
மொத்தத்தில் வாழ்க்கையின் முழுமையாய்
முழுதாய் உணர்ந்த பெற்றோர்
அதை அள்ளி வழங்கிய குழந்தை
அன்புடன் மலராய்...

அன்புடன் பற்றிய என் முதல் தமிழ் கவிதைக்கு
என்ன தலைப்புத்தர..? " அன்பு மலர்கள் " எனவா.?
அன்புடனிடமே கேட்கிறேன்.!!
இவ்வாண்டு துவக்கத்தில் என்னிதய மொழியை
மீண்டும் எழுதக்கற்று கொடுத்து
இதயம் நுழைந்து பல நல்லிதயங்களை
எனக்குத்தொடுத்து கொடுத்த வாசமுள்ள பூமாலை நீ..!!!
அன்புடனின் மிகுதியின் இறுதிவரை
உன் மலர்க்கொத்தில் நானும் ஒரு கவிமாலையாய்
வாசம் வீசி உன் அன்புடன் வருவேன் நான்.!!
இணையத்தில் இதயமொழி தேடியபோது என் மின்னஞ்சலில்
எனக்கு நம் இதயமொழியை முதன் முதலாய் காட்டிய என்
அண்ணன் அசன் புகாரி அன்புடனின் ஆசானாய் மாறி
அன்புடனில் எழுத ஆசிர்வதித்த பெரியவர் சீனா ஐயா
எனக்கு எழுதுவதற்கு உந்து சக்தி கொடுத்த கவிஞர் சக்திதாசன்
கவிஞனே வா நீ வந்து எழுது என்னோடு சேர்ந்து என வாஞ்சையோடு
மல்லிகைப்பூ தூவி வரவேற்ற வாணி அக்கா
அழகான அன்புடனின் செய்தி மற்றும் தகவல் தொகுப்பாளர்
வா நண்பா என்னோடு சேர்ந்து கவிதை ரீங்காரம் இடு
என்றழைத்த இளம் இலங்கை கவி ரிஷான்
அடடா என்னே அருமை என அனைவரையும் அன்போடு அரவணைக்கும்
அராதா கவி அன்புடனில் பாசத்தை மும்மாறி பொழியும் பாசக்கார நண்பா
இப்படியாய் ஓராயிரம் கவிஞர் பெருமக்களை எனக்கு அறிமுகப்படுத்திய
அண்ணன் அன்புடனின் ஆசான் அசன் புகாரிக்கா? அல்லது
அவரை எனக்கு அறிமுகப்படுத்திய இறைவனுக்கா?
யாருக்குச் சொல்ல? என் நன்றிகளை?!! எனக்குள் குழப்பம்!
இருந்தும் ஆயிரம் கவிபெருமக்களுக்கும் ஓராயிரம் நன்றிகள்
உயிர்ப்பூ..

உன்னைப்பற்றிய என் முதல் தமிழ் கவிதைக்கு
என்ன தலைப்புத்தர..? " உயிர்ப்பூ " எனவா.?
உன்னிடமே கேட்கிறேன்.!!
பாதியில் வந்து
விழியில் விழாது
இதயம் நுழைந்து என்னுயிரில்
கலந்த உணர்வு நீ..!!!
வாழ்க்கை மிகுதியின் இறுதிவரை
உன் உள்ளத்தில் உறவாட வருவேன் நான்.!!
இணையத்தில் இதயம் தேடியபோது என் மின்னஞ்சலில்
உதயமாகிய " உயிர்க்கவிதையே"
உன்னை உலகுக்கு அனுப்பிய கடவுளுக்கா? இல்லை உன்னை
என்னில் உதயமாக்கிய இணையத்திற்கா? யாருக்குச் சொல்ல?
என் நன்றிகளை?!! எனக்குள் குழப்பம்!
கண்மணிக்கு எட்டா தூரத்தில் பூத்திருக்கும் என்னுயிர்ப்பூவே
நெஞ்சில் பாசமலராய் உருமாறிய நீ.. என் உயிர் உள்ளவரை நீயே..
Subscribe to:
Posts (Atom)


